தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கட்டணம் இல்லா பேருந்து சேவை மகளிர், உரிமைத்தொகை திட்டம், உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம், தோழி விடுதலைகள் திட்டம் போன்ற திட்டங்களை . மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூபாய் 1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதனைப்போலவே அரசு பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடனும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஏழைப் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த வகையில் புதிதாக திருமணம் ஆகும் பெண்களுக்கான திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதாவது, பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணங்களுக்கு, திருமண உதவித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் திருமண செலவுக்கான பணமும், தங்கமும் வழங்கப்படுகிறது.
சரி, திருமண உதவித்தொகை திட்டம் எப்படி செயல்படுகின்றது என்பதை பற்றி பார்க்கலாம்?
கணவரை இழந்த தாய்மார்களுக்கு அவர்களின் மகள் திருமணத்திற்கு ஈவேரா மணியம்மையார் நினைவு திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூபாய் 25,000 பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. அதுவே, பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூபாய் 50,000 பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.இது மட்டுமல்லாமல், அன்னை தெரசா நினைவு திட்டத்தின் மூலம் ஆதரவற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூபாய் 25,000 பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. மேலும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூபாய் 50,000 பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டம், திருமணம் செய்ப்பவர்களுக்கு மட்டுமில்லை, மறுமணம் செய்வபர்களுக்கும் உண்டு. அதாவது கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கல்வித் தகுதி இல்லாத பெண்களுக்கு ரூபாய் 25,000 பணமும், 4 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. மேலும்,பட்டப்படிப்பு முடித்த
பெண்களுக்கு ரூபாய் 50,000 பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு சில நிபந்தனைகள் உண்டு அவற்றையும் பற்றி பார்க்கலாம்!!
இந்த திட்டத்தின் உதவி தொகையை பெற வேண்டும் என்றால் குடும்ப வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இந்த திட்டங்களில் பயன்பெற முடியும்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த திட்டத்திற்கு என்னனென்ன ஆவணங்கள் தேவை என்பதை பார்க்கலாம்?
இந்த திட்டங்களில் உதவித்தொகை பெற திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது திருமண அழைப்பிதழ், மணமகன் மற்றும் மணமகளின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ், கல்வி சான்றிதழ், வங்கி கணக்கு விவரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.