இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நம் வாழ்கை முறையே மாறிவிட்டது. எல்லாமே கையில் உள்ள ஸ்மார்ட்போனில் முடிவடைகிறது. நாம் தேவையான பொருட்கள் முதல் சேவைகள் வரை, வீட்டிலிருந்து வெளியே போகாமலேயே ஆடர் செய்து பெற முடிகிறது. டிக்கெட் புக்கிங், ரீசார்ஜ், பில் கட்டுதல் எல்லாமே ஆன்லைனில் முடிவடைகிறது. இப்போது வங்கிக் கடன்கள் கூட ஆன்லைனில் விண்ணப்பிக்க முடிகிறது என்பதே இதன் சிறப்பம்சம்.
இப்படித் தான், தங்க நகைக் கடனும் டிஜிட்டல் முறையில் வந்துவிட்டது. இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏற்கனவே வங்கியில் நகைக் கடன் வாங்க தாமதம், சிரமம் என்று நிறைய பேர் நகையை அடகு கடைகளில் வைப்பதையே விரும்புகிறார்கள், அதிக வட்டி இருந்தாலும். ஆனா, இப்போது டிஜிட்டல் முறையில் நகை கடனுக்கு விண்ணப்பிக்கலாம். அதுவும் வீட்டிலிருந்தே.
உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டால், உங்கள் வங்கியின் மொபைல் செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்யவும். அப்புறம், உங்கள் மொபைல் எண்ணை வைத்து உள்நுழையுங்கள். நகைக் கடன் பகுதியில் சென்று, தங்கத்தின் எடை, தூய்மை – 18K, 22K, 24K போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
இதோடு, தங்க நகைக் கடன் EMI கால்குலேட்டர் மூலம், உங்களுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும், மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், எவ்வளவு கால அவகாசம் வேண்டுமென்றெல்லாம் தெரிந்து, உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம்.
ஆனால், தங்கத்தின் தூய்மையை உறுதிசெய்ய நீங்கள் வங்கிக் கிளைக்குச் செல்லவேண்டும். அங்குதான் தங்கம் சரிபார்க்கப்படும். அதற்குப் பிறகு, தேவையான தொகை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
இது போன்ற சுலபமான முறையைப் பற்றி இன்னும் நிறையப் பேருக்கு தெரியவில்லை. அதனால்தான் இந்த தகவலை எல்லோரும் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும். தங்க நகைக் கடனில் சமீபத்தில் சில மாற்றங்களும் வந்துள்ளதால், விண்ணப்பிக்கும்முன் அதைப்பற்றிய விவரங்களை வங்கியின் அதிகாரப்பூர்வ சேனல் மூலமாக தெரிந்து கொள்ளவும்.
இப்படி ஒரு டிஜிட்டல் மாற்றம் நம்மை முன்னேற்றும் ஒரு பெரிய வாய்ப்பு என்பதை மறக்க கூடாது.