Tuesday, June 24, 2025

காதலிக்க மறுத்த சிறுமி : கொலை செய்ய முயன்ற காதலன் கைது

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், ஆத்துமேடு பகுதியை சேர்ந்த பேட்ரிக் சிலுவைமுத்து (19), திண்டுக்கல்லை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் பெற்றோர் கண்டித்ததால், அந்த சிறுமி பேட்ரிக் சிலுவைமுத்துவுடன் பேச மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பேட்ரிக் சிலுவைமுத்து, சிறுமியின் வீட்டிற்கு சென்று, மீண்டும் காதலிக்க வற்புறுத்தியுள்ளார். சிறுமி மறுத்ததால், தனது கையில் இருந்த பிளேடால் சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த சிறுமி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பேட்ரிக் சிலுவைமுத்துவை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news