ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த தேர்தலின் போது முதியோர் ஊக்கத்தொகை, பெண்களுக்கு இலவச பயணம், இலவச சிலிண்டர் உள்ளிட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆந்திர போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள 11,216 பஸ்களில், சுதந்திர தினமான, வரும் ஆகஸ்ட் 15 முதல், பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார்.