இந்த காலத்தில், பெண் குழந்தைகளின் கல்வியை முன்னேற்றும் பணி, மிக முக்கியமான ஒன்றாக மாறியிருக்கு. இந்த நோக்கத்தில், மத்திய அரசும் மாநில அரசுகளும் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள். அதில் ஒன்று – இந்திரா காந்தி ஒற்றை பெண் குழந்தை கல்வி உதவித்தொகை திட்டம்.
தொடர்ந்து உயர்கல்வி படிக்க விரும்பும், குடும்பத்தில் ஒரே பெண் குழந்தையாக உள்ள மாணவிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டம், உண்மையில் ஏராளமான குடும்பங்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ், மொத்தம் ரூ.36,200 – இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக மாணவிகள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி அல்ல, நேரடி முறையில் முதலாம் ஆண்டு முதுகலைப் படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.
முக்கியமாக, வீட்டில் மற்றும் யாரும் – அண்ணன், தம்பி – இருக்கக்கூடாது. ஒரு குடும்பத்தில் ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தால் கூட இந்த திட்டத்திற்கு தகுதி இல்லை. ஒரே பெண் குழந்தையாக இருந்தால் மட்டுமே இந்த உதவித்தொகையை பெற முடியும்.
இந்த உதவித் தொகையை வழங்குவது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்குட்பட்ட யுஜிசி. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த உதவியால் பயன் பெறுகிறார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்கள் –
10, 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள்,
இளங்கலை பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்று,
முதுகலைப் படிப்பில் சேர்ந்ததற்கான சான்றிதழ்,
ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக், வருமானச் சான்று, சாதிச் சான்று – இவையெல்லாம் தேவைப்படும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டுமென்றால் ?,
முதலில், UGC இணையதளமான scholarships.gov.in அல்லது ugc.ac.in ஆகியவற்றில், இந்த திட்டம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும்.
அதற்கேற்ப, உங்கள் சான்றிதழ்களுடன், அங்கு காணப்படும் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதி பெற்ற மாணவிகளுக்கு, உடனடியாக வங்கி கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படும். இரண்டாம் ஆண்டுக்கு சென்றபோது, மறுபடியும் renewal செய்து தொடர வேண்டியது அவசியம்.
குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்வியை கைவிட வேண்டிய நிலைக்கு வரும் மாணவிகளுக்கு, இது ஒரு பாக்கியம் தான். add how to apply