Saturday, June 7, 2025

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது

மதுரை திருமங்கலம் -கொல்லம் சாலையில் 4 வழிச் சாலை பணிகளால் விபத்துகள் அதிகமாக நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் விபத்துகளைத் தவிர்க்க சுரங்கப்பாதை அமைக்கக் கோரி 300-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் ஆர்.பி. உதயகுமாரும் கைது செய்யப்பட்டார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news