தண்ணீரில் தத்தளித்த மீனவர்கள்…

373
thoothukudi
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து மீனவர்கள் நாட்டு படகில் கடலுக்கு சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக படகில் உடைப்பு ஏற்பட்டு, நாட்டு படகு தண்ணீரில் மூழ்க தொடங்கியது.

இதனையடுத்து அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள், தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த 11 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

துரிதமாக செயல்பட்டதால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்றும் படகில் உட்புகுந்த நீர் வெளியேற்றப்பட்டதால் படகை கரைக்கு கொண்டுவர முடிந்தது எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.