Monday, December 8, 2025

விவசாய சங்க தலைவர் பி.ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை

அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராடிய பொழுது பொதுச்சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இது சம்பந்தமான வழக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News