இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் முகக்கவசம் கட்டாயம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சளி, இருமல், தொண்டை வலி இருப்பவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.