Monday, August 4, 2025
HTML tutorial

ஈரோடு இடைத்தேர்தல் : நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 64.02% வாக்குகள் பதிவானது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 24 மணி நேரமும் காவல் துறை கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 14 மேசைகளில் வாக்கு எண்ணும் பணியில் 51 பேர் ஈடுபட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News