Monday, August 11, 2025
HTML tutorial

தடை செய்யப்படும் எலான் மஸ்கின் க்ரோக்! காரணம் என்ன?

எலான் மஸ்கின் ‘க்ரோக்’ எனும் செய்யறிவு பாட்-க்கு (BOT) துருக்கியில் தடை செய்யப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், மறைந்த அவரது தாயார் மற்றும் முக்கிய தலைவர்கள் குறித்து க்ரோக்கில் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த க்ரோக், அவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அந்நாட்டின் நவீனகால தந்தையாகக் கருதப்படும் முஸ்தஃபா கெமால் அடாடுர்க் என்பவரைப் பற்றியும் அவதூறு பதில்களை அளித்துள்ளது. இதையடுத்து க்ரோக்கை தடை செய்யக்கோரி அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை இன்று விசாரித்த அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம், ‘க்ரோக்’ எனும் செய்யறிவு தொழிநுட்பத்துக்கு தடை விதிக்குமாறு துருக்கியின் தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News