Tuesday, June 3, 2025

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விவசாயி பலி

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள ராசாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சீத்தாராமன். இவர் வீட்டில் இருந்தபோது சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை மீட்க முயன்ற மகன் அருள் படுகாயம் அடைந்ததார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், விவசாயியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த அருளை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news