Wednesday, July 2, 2025

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பு போதைப்பொருள்

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏஷியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணி ஒருவரின் உடமைகளில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவர் தனது உடமைகளில் மறைத்து வைத்திருந்த 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருள் (கஞ்சா) கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 கோடி ஆகும். இந்தப் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news