தமிழ்நாட்டில் நியாய விலை கடைகளில் அரிசி, பருப்பு, சக்கரை, உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்கள் மாதாமாதம் நியாயவிலை கடைக்கு சென்று, பயோமெட்ரிக் வைத்து பொருட்கள் பெரும் நடைமுறை தற்போது உள்ளது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் காடுதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய நனைமுறை மூலம் ஏராளமான மக்கள் பயனடைவார்கள் என்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முதற்கட்டமாக இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் வரும் ஜூலை 1 முதல் 5ஆம் தேதி வரை 10 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிது.
இந்த திட்டம் சென்னை, நெல்லை, திண்டுக்கல், சிவகங்கை, தர்மபுரி, ஈரோடு, ராணிப்பேட்டை, நீலகிரி, கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .