தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4-ந்தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தது. டிசம்பர் 11-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி படிவங்கள் பெறும் பணி நடந்து வந்தது.
தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.


