Saturday, June 28, 2025

பான் கார்டு வச்சுருக்கீங்களா? உடனே இதை ‘update’ பண்ணுங்க! கடைசி தேதி இது தான்!

இந்தியாவில் ஆதார் அட்டை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது பான் அட்டையும். வருமான வரித் துறையால் வழங்கப்படும் இந்த பான் அட்டை இல்லாமல், நிதி தொடர்பான எந்த ஒரு முக்கியமான செயலையும் செய்ய முடியாது. வங்கியில் கணக்கு தொடங்குவதோ, வருமான வரி தாக்கல் செய்வதோ, கடன் பெறுவதோ — அனைத்திற்கும் பான் அட்டை அவசியம்.

இப்போது வருமான வரித் தாக்கலுக்கான கடைசி தேதி செப்டம்பர் 15 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள், உங்கள் பான் அட்டை சமீபத்திய விவரங்களோடு சரியாக இருக்க வேண்டும். அதாவது, அதில் உங்கள் பெயர், பிறந்த தேதி, கைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் எதிலும் பிழை இருக்கக் கூடாது.

சில நேரங்களில் பெயரில் எழுத்துப்பிழை இருக்கலாம். சிலர் திருமணத்துக்குப் பிறகு குடும்பப்பெயரை இணைக்க விரும்புவார்கள். சிலர் தங்களுடைய பெயரை சட்டபூர்வமாக மாற்றியிருப்பார்கள். இந்த மாதிரியான மாற்றங்கள், பான் அட்டையிலும் தவறாமல் திருத்தப்பட வேண்டும்.

இதற்கு அரசு ஒரு எளிய வழியையே ஏற்படுத்தியுள்ளது. NSDL என்ற இணையதளத்தின் மூலம், பான் கார்டு விவரங்களை ஆன்லைனில் திருத்தலாம். அங்கே உள்நுழைந்து, புதிய விவரங்களை சரியாக பதிவுசெய்து, பெயர் மாற்றத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை இணைத்துத் தர வேண்டும். திருமணத்திற்குப் பிறகு பெயர் மாற்றம் என்றால், திருமணச் சான்றிதழ் தேவைப்படும்.

படிவம் நிரப்பி, எல்லாவற்றையும் சரிபார்த்து, அனுப்பியவுடன் உங்கள் விண்ணப்பம் செயல்பாட்டிற்கு செல்லும். சில நாட்களில், புதிய பான் அட்டையை PDF வடிவில் நீங்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அச்சடிக்கப்பட்ட புதிய பான் அட்டை, சுமார் 45 நாட்களுக்குள் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும். இந்த மொத்த செயலுக்கு சிறிய கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

பான் அட்டை உங்களிடம் இருக்கிறது என்பதிலேயே இல்லாமல், அதில் உள்ள விவரங்கள் முழுமையாகத் துல்லியமாக இருக்க வேண்டும். இல்லையெனில், நிதி தொடர்பான முக்கியமான பணிகளில் தாமதம், தடைகள் ஏற்படும். அதனால்தான் இப்போதே உங்களுடைய பான் அட்டையைப் பரிசோதித்து, அவசியமான திருத்தங்களைச் செய்து வையுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news