Saturday, August 2, 2025
HTML tutorial

இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கு போக வேண்டாம் : சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என சிங்கப்பூர் மக்களுக்கு அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலினால் இந்திய, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எனவே இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு பயணம் செய்யவேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News