திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி வரவேற்று பேசினார்.
கட்சிப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 16 நிர்வாகிகளுக்கு நற்சான்று, பணிமுடிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கு தந்தை பெரியார் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
