குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்வபம் நாடு முழுவதும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விமான விபத்து தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில் : “அகமதாபாத்தில் 242 பேருடன் சென்ற ஏர் இந்தியா போயிங் விமானம் விபத்துக்குள்ளான செய்தி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணம் முழுவதும் விமானத்தில் பயணித்தவர்களின் குடுமபத்தினருடனே உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என நம்புகிறேன்.”
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.