Thursday, June 26, 2025

இனிமே போன் செய்யும் போது அந்த தொல்லை இருக்காது..!!

பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில், ஒருவர் மற்றொருவரை போனில் அழைத்தால் வாய்ஸ் மெசேஜ் மூலம் வழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வாய்ஸ் மெசேஜில், இணையதள குற்றவாளிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்… என்று கூறும். ஒரு நாளைக்கு பல முறை இந்த வாய்ஸ் மெசேஜ் வருவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.

பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து வாய்ஸ் மெசேஜ் முழுமையாக நீக்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news