டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை (ED) சோதனை நடத்தியது. இந்த சோதனை முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகம் சீல் வைக்கப்பட்டதாகவும், இதற்கு எதிராக இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் எதன் அடிப்படையில் விசாரணை? , விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, சீல் வைக்க என்ன அதிகாரம் இருக்கிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்கள் போதுமானதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டது.