திருப்பூரை சேர்ந்த திமுக பிரமுகர் கந்துவட்டி கொடுமை செய்வதாக கூறி பாதிக்கப்பட்ட நபர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சி.டி.சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகாசன். இவர் திருப்பூர் பென்னி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் மகாதேவன் என்பவரிடம் 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
பின்னர், மூன்று மாதத்தில் ஐந்து லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்தியுள்ளார். மீதமுள்ள 75 ஆயிரம் ரூபாயை செலுத்த சென்ற நிலையில், வட்டியாக இரண்டரை லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என திமுக பிரமுகர் மகாதேவன் மிரட்டுவதாக கூறி திமுக நிர்வாகி மகாதேவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட சந்திரகாசன் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்தார்.