சீனாவின் ரகசியமான அணு ஆயுத சக்தி… இப்போது உலகிற்கு தெரியவந்துள்ளது. இதுவரை தன்னுடைய அணு ஆயுதங்களை பொதுவில் பெரும்பாலும் மறைத்து வைத்திருந்த சீனா…, இப்போது ‘டிஎஃப்-5’ என்ற தனது சக்திவாய்ந்த ஏவுகணையை வெளிக்கொணர்ந்திருக்கிறது. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில் தயாரிக்கப்பட்டு, 12,000 கி.மீ வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தூரம் இதைவிட குறைவாக இருந்ததால், அமெரிக்கா அதிர்ச்சியிலும் பதற்றத்திலும் மூழ்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் போட்டியிட்டு வந்த சீனாவை, இப்போது அமெரிக்கா நேரடி ஆயுத மேடைக்கு அழைத்துவிட்டது. இது ஒரு புதிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த ‘ஷாங்க்ரி-லா’ மாநாட்டில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத், சீனாவை தைவான் குறித்து கடுமையாக எச்சரித்திருந்தார். தைவானை ஆக்கிரமிக்க சீனா தயாராகி வருகிறது என்றும், அதற்கும் அருகிலுள்ள தீவுகளில் ராணுவ வசதிகளை சேர்த்துவிட்டது என்றும் அவர் கூறினார். சீனாவின் பெயரை மட்டும் 20 முறை குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இதற்கே பதிலடியாக சீனா தனது டிஎஃப்-5 ஏவுகணையை வெளியே காட்டியிருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஆனால், அமெரிக்காவின் ஆசிய ராணுவ அமைப்பும் சீனாவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. ஜப்பானில் மட்டும் 14 ராணுவ தளங்கள், பிலிப்பைன்ஸில் 9, தென் கொரியாவில் 8, ஆஸ்திரேலியா மற்றும் பபுவா நியூ கியானாவில் 10… மொத்தம் 41 ராணுவ முகாம்கள்.
இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை மறைமுகமாக சீனாவை எதிர்த்த அமெரிக்கா, இப்போது தைவான் விவகாரத்தில் நேரடியாக மோத தயாராகியுள்ளது. தைவான் தனி நாடு என்று அமெரிக்கா உறுதியாக்க, அது சீனாவின் ஒரு பகுதிதான் என சீனா உறுதியாக்க. இந்த வாதத்துக்குள் சீனாவின் ராணுவ சக்தியும், அமெரிக்காவின் ராணுவ சுழற்சியும் படிப்படியாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.