திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் பல்வேறு துறையின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 174 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆலங்காயம் ஊராட்சியில் நெக்னாமலையில் பொதுமக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.30 கோடி மதிப்பில் 7 கிலோ மீட்டர் சாலை.
குமாரமங்கலம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் துணை மின்நிலையம்.
மல்லகுண்டா பகுதியில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு பெறும் விதமாக 280 ஏக்கர் 200 கோடியில் சிப்காட் பூங்கா.
திருப்பத்தூர் நகர் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையத்தில் ரூ.18 கோடி மதிப்பில் அடுக்குமாடி வணிக வாளகம்.
ஆம்பூரில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய நூலகம் கட்டப்பட்டும் என அறிவித்துள்ளார்.