காவிரி டெல்டா பாசனத்திற்காக சேலம் மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து இன்று 92-வது ஆண்டாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை தண்ணீரை திறந்து வைத்து காவிரி ஆற்றில் பூக்கள் தூவி வரவேற்றார்.
முதற்கட்டமாக விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. பின்னர் படிப்படியாக 12 ஆயிரம் கன அடி வரை நீர்திறப்பு உயர்த்தப்பட உள்ளது. மேட்டூர் அணை நீர்திறப்பு மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.