சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவையில், QR கோடு மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் QR சேவை மூலம் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ QR டிக்கெட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பயணிகள் மெட்ரோ செயலி, வாட்ஸ்ஆப், சிஎம்ஆர்எல் பயண அட்டைகள் மூலம் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
