சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போது 9 பெட்டிகளாக இருக்கும் புறநகர் மின்சார ரெயில்கள் 12 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது.
அதன் படி சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் இடையேயான ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.