Friday, June 6, 2025

திருமண நிகழ்ச்சியில் ரூ. 14.5 லட்சம் மதிப்புள்ள பண மாலை கொள்ளை

ராஜஸ்தானில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ரூ. 14.5 லட்சம் மதிப்புள்ள பண மாலையை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 1-ந்தேதி அன்று நடைபெற்ற திருமணத்தில் மணமகனுக்கு அணிவிப்பதற்காக ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையை அரியானாவில் இருந்து வாடகைக்கு எடுத்து உள்ளனர். இதனை அறிந்த மர்மநபர்கள் காரில் சென்று துப்பாக்கிமுனையில் மாலையை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news