Sunday, February 1, 2026

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, கடந்த 4-ந்தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு இருப்பதால் அங்கு செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவரை போலீசார் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். ஆனால் எச்.ராஜா வாகனத்தில் ஏற மறுத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், அரசு ஊழியருக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related News

Latest News