கடலூர் அருகே பாய்லர் டேங்க் வெடித்து சிதறி விபத்து

கடலூர் அருகே சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் பாய்லர் டேங்க் வெடித்து சிதறி பயங்கர விபத்து ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள லாயல் எனும் சாயப்பட்டறை தொழிற்சாலையில் இன்று அதிகாலை பாய்லர் டேங்க் வெடித்து சிதறியது.

6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் வெடித்ததில், சுற்றியுள்ள வீடுகளுக்குள் ரசாயன கழிவுநீர் புகுந்தது. 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் ரசாயன கழிவுநீர் புகுந்ததால், பாதிக்கப்பட்டவர்கள் ஆத்திரமடைந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Related News

Latest News