டாஸ்மாக் மீதான ஊழல் புகார் குறித்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்த திட்டமிட்டது.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். அவரை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் வைப்பதற்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.