ஜப்பானில் உள்ள யமகதா மாகாணத்தின் ஹிகஷின் நகரில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலைய ஓடுதளத்தில் கரடி ஒன்று புகுந்தது. இதனால் விமானங்கள் புறப்படவும் முடியாமல் தரையிறங்கவும் முடியாமல் தடுமாறின.
இதன் காரணமாக, 10க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. பின்னர், அந்த கரடி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதிக்குள் திரும்பி சென்றது.