இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு, முன்னணி வீரர் கேஎல் ராகுலும் தேர்வாகி உள்ளார். சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரினை விளையாடவுள்ளது. தற்போது இந்திய A அணி இங்கிலாந்து A அணியுடன் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது.
இதில் இந்திய வீரர் கருண் நாயர் இரட்டை சதமடித்து, பிளேயிங் லெவனில் தன்னுடைய இடத்தை உறுதி செய்து கொண்டுள்ளார். இதேபோல இளம்வீரர்கள் சர்பராஸ் கான், துருவ் ஜூரலும் அபாரமாக ஆடி வருகின்றனர். 2வது பயிற்சி ஆட்டம் விரைவில் துவங்கவுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி Play Offக்கு முன்னேறியதால், சுப்மன் கில் 2வது பயிற்சி ஆட்டத்தில் இருந்து விலகிவிட்டார். இந்தநிலையில், ”மழையால் பெங்களூர், மும்பையில் என்னால் வலைப்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை.
எனவே கில்லுக்கு பதிலாக 2வது பயிற்சி ஆட்டத்தில் நான் விளையாடுகிறேன். எனக்கு வாய்ப்பு தாருங்கள்”, என்று ராகுல் BCCIயிடம் கோரிக்கை வைத்தாராம். ராகுலின் ஆர்வத்தைப் பார்த்து, BCCIயும் அவருக்கு பச்சைக்கொடி காட்டி விட்டதாம்.
இதையடுத்து ராகுல் விரைவில் இங்கிலாந்துக்கு பறக்கவுள்ளார். இந்தியாவில் ராகுலின் டெஸ்ட் சராசரி 39.62 ஆகவும், வெளிநாடுகளில் 31 ஆகவும் இருக்கிறது. அதேநேரம் இந்தியாவில் ஒரு சதம் மட்டுமே அடித்திருக்கும் ராகுல், வெளிநாட்டு மண்ணில் 7 சதங்களை விளாசியிருக்கிறார். ராகுலுக்கு BCCI சம்மதம் தெரிவித்ததன் பின்னணி காரணம் இதுதான். ரோஹித், கோலி ஓய்வால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்ற, BCCI தீவிரமாக Sketch போட்டு வருவது குறிப்பிடத்தக்கது