பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூரில் நடந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், ஒரு வீரர் சிக்ஸர் அடித்த சில நொடிகளில் மைதானத்திலேயே சரிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேரடியாக கேமராவில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகிலும், பொதுமக்களிடையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.