அசாம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாத மழை பெய்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், ஆற்றங்கரையோர குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.
வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.