மும்பை விமான நிலையத்தில் இரண்டு டாக்ஸி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதம் ஆபத்தான முறையில் மாறியது.
மும்பை விமானநிலையத்தில் நேற்று நள்ளிரவு இரண்டு டாக்ஸி ஓட்டுநர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஓட்டுநர் ஒருவர் காரின் மீது குதித்துள்ளார். டாக்ஸியில் இருந்த ஓட்டுநர் டாக்ஸியை வேகமாக ஓட்டியுள்ளார்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் இதனை படம்பிடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து டாக்ஸி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.