இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 22,000 குரூப் ‘டி’ (நிலை–1) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: குரூப் ‘டி’ (நிலை–1)
காலியிடங்கள்: 22,000
தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது
என்சிவிடியால் வழங்கப்படும் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ.18,000
வயதுவரம்பு:
1.1.2026 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு முறை:
கணினி வழித் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் – ரூ.250
இதர அனைத்து பிரிவினர்கள் – ரூ.500
(கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்)
விண்ணப்பிக்கும் முறை:
https://www.rrbapply.gov.in
https://www.rrbchennai.gov.in
என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிக்கும் காலம்:
21.01.2026 முதல் 20.02.2026 இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
