Monday, September 1, 2025

இந்தியாவை சீண்டினால் இதுதான் கதி! டிரம்பை கிழித்தெடுத்த அமெரிக்க பத்திரிகையாளர்!

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மீண்டும் ஒரு அடி விழுந்திருக்கிறது, அதுவும் இந்தியா தொடர்பான ஒரு பிரச்சினையில்! ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கியதற்காக, டிரம்ப் நமது நாட்டின் மீது இறக்குமதி வரிகளை விதித்தது நினைவிருக்கிறதா?

அந்த முடிவை, இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ரிக் சான்செஸ் மிகக் கடுமையாகச் சாடியிருக்கிறார். டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை “அவமானகரமானது மற்றும் அறியாமையால் நிறைந்தது” என்று அவர் வர்ணித்திருப்பது, இப்போது உலக அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ரிக் சான்செஸ் என்ன சொன்னார்?

“அமெரிக்காவின் இந்த முடிவு, பெரும்பாலான மக்கள் பார்வையில் ஒரு முட்டாள்தனமான விஷயம். அவர்கள் இந்தியாவை ஒரு பள்ளி மாணவனைப் போல நடத்துகிறார்கள். அவங்களுக்கு என்ன செய்யணும், என்ன செய்யக்கூடாதுனு பாடம் சொல்லிக் கொடுக்குற மாதிரி இருக்கு,” என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “பலர் இந்தியாவின் வரலாறு காந்தியுடன் தொடங்கியது என்று நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பாவும், மெசபடோமியாவும் உலகிற்குச் செய்ததை விட, இந்தியா செய்த பங்களிப்பு மிக முக்கியமானது. அப்படிப்பட்ட வளமான வரலாற்றைக் கொண்ட ஒரு நாட்டை, ஒரு பள்ளி மாணவனைப் போல நடத்துவது எவ்வளவு பெரிய அவமரியாதை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிறகு அவர் சொன்னதுதான் மிக முக்கியமான விஷயம்…”இந்தியா ஒரு பெரிய சக்தி, பள்ளி மாணவன் அல்ல!” என்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

டிரம்ப் சில நேரங்களில், “வெறுப்பு மற்றும் அறிவியல் அடிப்படை இல்லாத சிந்தனையின்” அடிப்படையில் முடிவுகளை எடுப்பதாகவும், ஆனால் இந்தியா, தனது நிலைப்பாட்டில் மிகவும் புத்திசாலித்தனமாக உறுதியாக நின்றதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இந்த வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. “நாங்கள் யாரிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்று நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டாம்” என்று இந்தியா முகத்தில் அடித்தாற்போல் அமெரிக்காவுக்குப் பதில் சொன்னது அல்லவா. அந்தத் தருணத்தை, “உலக வரலாற்றையே மாற்றிய தருணம்” என்று சான்செஸ் குறிப்பிடுகிறார்!

அவர் என்ன சொல்கிறார் என்றால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகை ஆண்டு வந்த அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளின் சக்தி, மெதுவாகக் குறையத் தொடங்கிவிட்டது. அந்த சக்தி இப்போது, இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகளை உள்ளடக்கிய ‘தெற்கு உலக நாடுகளுக்கு’ மாறப்போகிறது என்று அவர் கணித்திருக்கிறார்.

ஆக, டிரம்பின் கொள்கை மீதான இந்த விமர்சனம், ஒரு தனிப்பட்ட கருத்தாக இல்லாமல், மாறிவரும் உலக ஒழுங்கைக் காட்டும் ஒரு கண்ணாடியாக மாறியிருக்கிறது. இந்தியா இனி யாருடைய பேச்சையும் கேட்காது, தனது சொந்த முடிவுகளை எடுக்கும் ஒரு பெரும் சக்தி என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்திருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News