அகமதாபாத் விமான விபத்து காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் சமூக வலைதளங்களில் தனது முகப்பு பக்கத்தை கருப்பு நிறத்தில் மாற்றியுள்ளது.
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில் 265 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து உலகநாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பல கனவுகள் மற்றும் ஆசைகளோடு விமானத்தில் லண்டனுக்கு புறப்பட்ட 242 பேரில், ஒருவரை தவிர அனைவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து ஒரு கருப்பு நாளாக மாறியுள்ள நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பங்கங்களில் சுயவிவர படத்தினை கருப்பு வண்ணத்தில் மாற்றியுள்ளது.
