Wednesday, February 19, 2025

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்

அடுத்த மாதம் 5ம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகின்றனர். மேலும் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்திருந்தது. இந்த சூழலில் அ.தி.மு.க. பிரமுகர் செந்தில் முருகன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

Latest news