அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் கொக்கைன் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருளை சப்ளை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்திடம் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த்திடம் நடத்தப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.