Wednesday, August 13, 2025
HTML tutorial

“அகமதாபாத் விமான விபத்து ஒரு துயர சம்பவம்” – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 திரைப்படத்தில் தற்போது நடித்துக் கொண்டு வரும் நிலையில், பெங்களூரில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்காக பெங்களூரு புறப்பட்டு செல்கிறேன். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருப்பதும் தெரிவித்தார் .

இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து குறித்து கேட்டதற்கு அது ஒரு துயரமான சம்பவம் என்று தெரிவித்துவிட்டு விமான நிலையத்திற்கு உள்ளே புறப்பட்டு சென்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News