தஞ்சை அருகே தாத்தாவுடன் குளிக்கச் சென்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தை சேர்ந்த மின்னல் வீரன், பிரியா தம்பதியரின் மகன் ஜெயகாந்தன். இவர் தனது தாத்தா சுந்தர்ராஜூடன் கருங்குளம் நசுவினி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆற்றுக்குள் இறங்கி குளித்தபோது ஜெயகாந்தனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தகவல் அறிந்து ஓடி வந்த உறவினர்கள் ஜெயகாந்தனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது ஜெயகாந்தனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
