Monday, June 16, 2025

திருமணம் செய்து மோசடி செய்ததாக பிரபல சின்னத்திரை நடிகை மீது புகார்

பிரபல சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் தன்னை மோசடி செய்ததாக ராஜ் கண்ணன் என்பவர் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தன்னுடன் நட்பாக பழகி வந்த ரிகானா பேகம் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரிடம் விவாகரத்து ஆனதாக கூறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு ரூ.20 லட்சம் வரை பணம் செலவு செய்ததும் அவரது வீட்டிற்கு சென்றபோது கணவருடன் விவாகரத்து ஆகாமலேயே தன்னை திருமணம் செய்து மோசடி செய்ததாக பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் இருவரையும் இன்று மாலை விசாரணை செய்ய பூந்தமல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news