அண்ணாமலை ‘லீடர்’ இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர்.. 3.5 மணி நேரத்தில் 5.63 லட்சம் பேர்!

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராகப் பணியாற்றி, தனது பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்துள்ளார்.We the Leader என்ற புதிய சமூக அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதாக அவர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது இந்தத் திடீர் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்து இதற்குப் பிரம்மாண்ட ஆதரவு குவியத் தொடங்கியுள்ளது.பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுத்த ராஜினாமாவை அக்கட்சியின் தேசியத் தலைமை முறைப்படி ஏற்றுக் கொண்ட சில நிமிடங்களிலேயே, அவர் தனது புதிய இயக்கத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார்.

அண்ணாமலை இயக்கத்தை அறிவித்து மக்களை இணைய அழைப்பு விடுத்த அடுத்த மூன்றரை மணி நேரத்திற்குள்ளாகவே, இந்த புதிய ‘லீடர்’ இயக்கத்தில் சுமார் 5.63 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் இளைஞர்கள் ஆன்லைன் மூலமாகத் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். தமிழக வரலாற்றில் ஒரு புதிய இயக்கத்திற்கு இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அளவுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு கிடைப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, நிமிடத்திற்குச் சராசரியாக 35 பேர் என்ற வேகத்தில் மக்கள் தொடர்ந்து தங்களை இந்த புதிய இயக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

அண்ணாமலையின் இந்த புதிய இயக்கம் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது. மேலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நெறிமுறைகள் மற்றும் அரசியலுக்கான மையம் (APJ Abdul Kalam Centre for Ethics and Politics) இந்த புதிய இயக்கத்தின் ஒரு அங்கமாக இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த மையத்தில் முறையாக பயிற்சி வழங்கப்படும் என்றும், இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related News

Latest News