18.05.2026; வாரத்தின் முதல் நாளே… இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளதன் தாக்கம் நகை சந்தையில் தெளிவாக பிரதிபலிக்க தொடங்கியுள்ளது. இந்த வரி உயர்வு காரணமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெள்ளி இறக்குமதி செய்யும் செலவு அதிகரித்துள்ளதால், அதன் விலை உள்நாட்டு சந்தையிலும் உயர்ந்துள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவாக கடந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான சனிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.14,750-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000-க்கும் விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை மேலும் உயரும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.14,750 மற்றும் ஒரு சவரன் ரூ.1,18,000 என்ற நிலைப்பாட்டிலேயே விற்பனையாகிறது. இதனால் தங்க விலை தற்காலிகமாக நிலைத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.

மறுபுறம் வெள்ளி விலை தொடர்ந்து உயர்வை பதிவு செய்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும் விற்பனையாகிறது. மேலும் பார் வெள்ளி விலை ரூ.3 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் நகை வியாபாரிகள் சந்தை நிலவரத்தை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

Related News

Latest News