Monday, January 26, 2026

விஜய் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூரில் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் புதுடெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.

இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் ஜனவரி 12-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

இந்நிலையில், விஜய் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர். பனையூரில் இருந்து கரூர் எடுத்து சென்ற சிபிஐ அதிகாரிகள், பேருந்தில் சோதனை செய்து வருகிறார்கள்.

Related News

Latest News