ரஜினி படத்தில் இருந்து விலகிய சுந்தர் சி!! என்ன காரணம்?

ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில் இயக்குநர் சுந்தர் சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ரஜினியின் 173வது படத்திலிருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுந்தர் சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன். புதிய படம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். ஆர்வத்துடன் காத்திருந்தவர்களை அதிருப்திக்குள்ளாக்கியதில் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related News

Latest News