கடுப்பான நடிகை பிரியாமணி!! வைரல் பேச்சு.. நடந்தது என்ன?

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகை பிரியாமணி.இவர், பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் முத்தழகாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரியாமணி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியது, ” பான் இந்தியா என்ற சொல்லைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள்.

அப்படி இருக்கும்போது எதற்காக அந்த வார்த்தை? இந்தி நடிகர் தென்னிந்திய படங்களில் நடித்தால் அவரை தென்னிந்திய நடிகர் என்று சொல்கிறோமா? ரஜினி, கமல், தனுஷ் போன்றவர்கள் பல மொழிகளில் நடிக்கிறார்கள்.

அவர்களை யாருமே பான் இந்தியா நடிகர்கள் என்று சொல்லவில்லையே. மொழி முக்கியமல்ல, நடிக்கும் கதாபாத்திரங்கள் தான் முக்கியம். பான் இந்தியா என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

Related News

Latest News