நீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் 8வது கண்டம்! 400 ஆண்டுகளாக விலகாத மர்ம பின்னணி என்ன?

உலகின் எட்டாவது கண்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க 375 ஆண்டுகள் எடுத்துள்ளனர். ‘நீருக்குள் புதைந்த கண்டம்’ என அழைக்கப்படும் இந்த நிலப்பரப்பு இன்னும் மர்மங்களால் சூழப்பட்டுள்ளது.

இதன் தேடல் 1642ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. டச்சு கடற்பயணி ஏபெல் டாஸ்மென், பூமியின் தெற்கு அரைக்கோளத்தில் இன்னொரு பரந்த கண்டம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஆராய்ச்சி மேற்கொண்டார். அக்காலத்தில் தெற்கு அரைக்கோளம் ஐரோப்பியர்களுக்கு அறியப்படாத பகுதியாக இருந்தது. வடக்கேயுள்ள கண்டங்களுக்கு சமநிலையாக தெற்கிலும் ஒரு நிலப்பரப்பு இருக்க வேண்டும் என்று அவர்கள் கணித்து, அதற்கு ‘டெர்ரா ஆஸ்ட்ராலிஸ்’ என பெயரிட்டிருந்தனர்.

இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் இருந்து இரண்டு சிறிய கப்பல்களுடன் புறப்பட்ட டாஸ்மென், மேற்கு, தெற்கு, பின்னர் கிழக்கு நோக்கிப் பயணித்தார். இறுதியில் அவர் நியூசிலாந்தின் தெற்கு தீவை சென்றடைந்தார். அங்கிருந்த பழங்குடியினர் மவோரி மக்களுடன் நடந்த முதல் சந்திப்பு மோதலாக மாறியது. அதில் அவரது சில குழுவினர் உயிரிழந்தனர். இதனால் அந்த இடத்துக்கு டாஸ்மென் “மூர்டேனர்ஸ் பே” – “கொலைகாரர்களின் வளைகுடா” என்று பெயர் வைத்தார்.

புதிய நிலத்தை கண்டிருந்த போதிலும், டாஸ்மென் மீண்டும் அந்த இடத்துக்கு திரும்பவில்லை. அவர் தேடிய தெற்குக் கண்டம் உண்மையிலேயே இருந்தது என்பதை உறுதிப்படுத்த, விஞ்ஞானிகள் பல நூற்றாண்டுகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

டாஸ்மெனின் கனவு 375 ஆண்டுகள் கழித்து நனவானது. இன்று ‘சியூலாண்டியா’ என அழைக்கப்படும் அந்த நீருக்கடிக் கண்டம், நம் உலகின் இன்னும் முழுமையாகப் புரியப்படாத புவியியல் அதிசயங்களில் ஒன்றாக உள்ளது.

Related News

Latest News